சனி, 27 மார்ச், 2010

கரையாக்கன்

பெரியம்மாவின் மகன் ஆப்தீன் காக்கா கருப்புதான் என்றாலும் சரியான பலம் அவருக்கு. அவருடன் சண்டைக்கு வரும் எப்படிப் பெரிய ஆளையும் வீழ்த்திப் போட்டுருவாரு. அவருக்கு தெறி கட்டையால நல்லா இலக்குக்கு தெறிக்கத் தெரியும். எனக்கு கொக்குத் தெறிச்சுத் தந்ததும் அவருதான் . 
எங்கட வீட்டுக்கு முன்னாலதான் பெரியம்மாவின் வீடு. அவங்கட வீட்டுக்கு முற்றமே ஓடைதான். குடிக்க எடுத்த தண்ணிக் கோப்பை போல சுத்தமா அழகா இருக்கும். பள்ளிக்கூடம், மதரசா போற நேரம் தவிர மற்ற நேரம் அந்த ஓடையிலதான் இருப்பன். தன்னிட மேல் மட்டத்தில சின்னச் சின்ன மீனெல்லாம் நிக்கும் உள்ளங்கை இரண்டையும் ஒன்டா இணைச்சி தண்ணிக்குள்ள தாட்டி மெது  மெதுவா மீனுக்கு நேர கொண்டுபோய் கைய உயத்தினா மீனெல்லாம் உள்ளம் கைக்குள்ள  மாட்டிக்கும். இல்லாட்டி காலால தண்ணிய கரைக்கு ஏத்திவிட்டா .....        

ஆறாவது பாங்கு

இரவில் விழிப்பதாகவும் பகலில் தூங்குவதாகவும்    ஊரே மாறிக் கிடந்தது.  இரவின் அபாயத்தை ஆகாயத்தில் வரைந்து காட்டி அந்திச் சூரியன் முக்காட்டை எடுத்து மூட அந்த எல்லைக் கிராமம் பீதியில் நடுங்கிட்டு. என்னநடக்கப் போகிறதோ நிசார் தூக்குக் கம்பிகளை கழட்டி, எஞ்சிய எலும்புகளையும் புதைத்து, மேசை நிலமெல்லாம் கழுவி முடித்து தட்டியை அடைத்து விட்டு நேரத்தை நினைத்து வானத்தைப் பார்த்தான். அவன் இறைச்சிக் கடை கழுவி வடியவிட்டிருந்த இரத்தக் கரை வானத்திலும் பரவிக் கிடந்தது. 
ஆறரையை தாண்டியிருக்கும் என ஊகித்து அவசர அவசரமாக குளித்து முடித்தான்.