சனி, 27 மார்ச், 2010

ஆறாவது பாங்கு

இரவில் விழிப்பதாகவும் பகலில் தூங்குவதாகவும்    ஊரே மாறிக் கிடந்தது.  இரவின் அபாயத்தை ஆகாயத்தில் வரைந்து காட்டி அந்திச் சூரியன் முக்காட்டை எடுத்து மூட அந்த எல்லைக் கிராமம் பீதியில் நடுங்கிட்டு. என்னநடக்கப் போகிறதோ நிசார் தூக்குக் கம்பிகளை கழட்டி, எஞ்சிய எலும்புகளையும் புதைத்து, மேசை நிலமெல்லாம் கழுவி முடித்து தட்டியை அடைத்து விட்டு நேரத்தை நினைத்து வானத்தைப் பார்த்தான். அவன் இறைச்சிக் கடை கழுவி வடியவிட்டிருந்த இரத்தக் கரை வானத்திலும் பரவிக் கிடந்தது. 
ஆறரையை தாண்டியிருக்கும் என ஊகித்து அவசர அவசரமாக குளித்து முடித்தான்.        

கருத்துகள் இல்லை: